ஆம்னி பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துள்ளானதில், அதிர்ஷ்டவசமாக 25 பேர் உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு ஓட்டுநர்கள் உள்பட 25 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
பெங்களூரில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து பரமத்திவேலூர் நீதிமன்றம் அருகே வந்த போது பேருந்தின் டயர் வெடித்துள்ளது.
இதில் பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பை தாண்டி எதிர் திசையில் உள்ள சாலையில் கவிழ்ந்து. இதில் பேருந்தை ஓட்டி வந்த ஆம்பூரைச் சேர்ந்த ஓட்டுநர் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் லேசான காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்: உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி
இதனால் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. பரமத்திவேலூர் காவல் துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்