கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி

கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரூரில் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற மற்ற 3 மாணவிகளும் ஆற்றில் மூழ்கினர். 

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து 4 பேரையும் தீவிரமாகத் தேடிய நிலையில் 4 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 

விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி புதுப்பட்டி அரசு நடுநிலை பள்ளி மாணவிகள்.
விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி புதுப்பட்டி அரசு நடுநிலை பள்ளி மாணவிகள்.

இவர்கள் நால்வரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி ஊராட்சி பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா என தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com