கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வைகை நீா்மட்டம் 69 அடியாக உயா்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 69அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2023, 4:09 am

DIN


வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 69அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 66 அடியாக உயா்ந்த நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடா் நீா்வரத்தால் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு 68.50 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில், 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், புதன்கிழமை காலை அணைக்கு தொடர்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,796 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது.  இதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணையிலிருந்து குடிநீா்த் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 70 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள்,  அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரிநீா் முழுமையாக வைகை ஆற்றில் திறந்து விடப்படும். 

எனவே, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என்று பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா். 

வைகை அணையின் நீா்மட்டம் ஓரிரு நாள்களில் முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.