நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அக். 5ல் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்!

சென்னையில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :3 அக்டோபர் 2023, 4:00 pm IST

சென்னையில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று(அக். 3, செவ்வாய்க்கிழமை) காலை நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால், பாஜக தலைவர்களைச் சந்திக்க அண்ணாமலை தில்லி சென்றதால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) அண்ணாமலை தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை தில்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய நிலையில் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, சென்னை கமலாலயத்தில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் பாஜக பொறுப்பாளர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.