அதிமுகவுடனான கூட்டணி குறித்த எனது முடிவை கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டேன், இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 'கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்களின் விருப்பம், அதைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்.
கூட்டணி பிரச்னையில் எனது முடிவை பாஜக தலைமையிடம் நான் ஆழமாக தெரிவித்துவிட்டேன். இனி கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும்' என்று கூறினார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, 'தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும்.
'என் மண், என் மக்கள்' நடைப்பயணம் முடிவடையும் நிறைவு நாளில் வருகிற ஜனவரி இறுதியில் பிரதமர் மோடி, சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தேர்தல் வருவதையொட்டி அடுத்த 7 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக எண்ணிக்கையில் பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும்' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் தோ்வு

ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம்

உ.பி.: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கு விபத்தில் 4 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

