சிறையில் இருந்து இயக்குகிறார் செந்தில் பாலாஜி: அண்ணாமலை

சிறையில் இருந்து இயக்குகிறார் செந்தில் பாலாஜி: அண்ணாமலை

சிறையில் இருந்து தினமும் செல்போனில் பேசி அமைச்சர்களை செந்தில் பாலாஜி இயக்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரசாரத்திற்காக சிறையில் இருந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுப்பது செந்தில் பாலாஜிதான். சிறையில் இருந்து தினமும் செல்போனில் பேசி அமைச்சர்களை செந்தில் பாலாஜி இயக்குகிறார். இம்முறை திமுக தங்கச் சுரங்கத்தையே கொட்டினாலும் கோவையில் பாஜதான் வெற்றிபெறும்.

பதிவாகும் வாக்குகளில் 60 சதவீதம் பெற்று நிச்சயம் வெற்றி பெறுவேன். நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானங்கள் தேவைப்படுகின்றன. விளையாட்டு மைதானம் தேவை தான், ஆனால் முதலில் சாலையை சீரமைக்க வேண்டும். பிரதமர் மோடி மேட்டுப்பாளையத்தில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com