தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, "தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 கோடி தொடர்பாக தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து செலவின பார்வையாளர் அறிவிக்கை சமர்பிக்க உள்ளார்.
ரூ. 1 கோடிக்கு மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி வரையிலான பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36.4% பூத் ஸ்லிப்கள்(தகவல் சீட்டு) வழங்கப்பட்டுள்ளது.
விக்கரவாண்டி தொகுதி காலி என தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.