5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும்: சாகு

தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News image

சத்யபிரத சாகு

Updated On :8 ஏப்ரல் 2024, 1:08 pm IST

தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, "தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 கோடி தொடர்பாக தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து செலவின பார்வையாளர் அறிவிக்கை சமர்பிக்க உள்ளார்.

ரூ. 1 கோடிக்கு மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி வரையிலான பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36.4% பூத் ஸ்லிப்கள்(தகவல் சீட்டு) வழங்கப்பட்டுள்ளது.

விக்கரவாண்டி தொகுதி காலி என தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.