கோடை விடுமுறை: சென்னை - நெல்லை சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோடை விடுமுறை: சென்னை - நெல்லை சிறப்பு ரயில்!
Published on
Updated on
1 min read

கோடை விடுமுறையையொட்டி சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் இருந்து ஏப். 11, 18, 25, மே. 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06070) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

கோடை விடுமுறை: சென்னை - நெல்லை சிறப்பு ரயில்!
ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படும் -விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

அதேபோல், மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் இருந்து ஏப். 12, 19, 26, மே. 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(06069) மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருச்சி, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், தாம்பரம் வழியே இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com