சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் ரூபாய் 75 மதிப்பிலான தங்க நகைகள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், உள்ள கழிவறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தூய்மை செய்துகொண்டிருந்தனர். அப்போது கழிவறையின் அருகே இருந்த குப்பைத் தொட்டி ஒன்றில், பார்சல் ஒன்று கிடப்பதை அவர்கள் கண்டனர். உடனடியாக இதுகுறித்து விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தின் பெயரில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் 4 தங்க கட்டிகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த பார்சலை பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 4 தங்கக்கட்டிகளின் மொத்த எடை ஒரு கிலோ, 250 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 85 லட்சம் என அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் வருகை பகுதியில் உள்ள, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.