வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம்.
ஆனால் கோடை விடுமுறை என்பதால் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பூங்காவில் ஏப்.30 ஆம் தேதி வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்றும், வழக்கமான நேரத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துவர வேண்டாம் என்று பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.