திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தூத்துக்குடி: தூய பனிமய மாதா திருவிழா திருப்பலி

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற தூய பனிமயமாதா பெருவிழா சிறப்பு திருப்பலி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

நற்கருணை ஆசீர் வழங்குகிறார் ஆயர் ஸ்டீபன் அந்தோணி.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 11:22 am IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற தூய பனிமயமாதா பெருவிழா சிறப்பு திருப்பலி திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயமானது, இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயமாகும். இப்பேராலய 442ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா கூட்டுத்திருப்பலி திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருபலி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.

இதில் உலக மக்கள் அனைவரும் இன்புற்று இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. இத்திருப்பலியில் தூத்துக்குடி மட்டுமில்லாமல் தென் மாவட்டம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான திருப்பலி நடைபெற்றது.

முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்ற உபகாரிகளுக்கான திருப்பலி.

முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்ற உபகாரிகளுக்கான திருப்பலி.

பெருவிழா நிறைவுத் திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, திருவிழாவின் சிகர நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி மாலையில் நடைபெறுகிறது. மாநகர வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவபவனி நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இத்திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Story image

திருவிழாவிற்கான பாதுகாப்பு பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 900 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.