லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

காரங்காடு தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:04 pm

திருவாடானை அருகே காரங்காட்டில் அமைந்துள்ள தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் தவ நடை திருப்பாதை யாத்திரை வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த தூய செங்கோல் மாதா தேவாலயம் அமைந்துள்ளது.

இதில், தவக்காலத்தையொட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவ நடை திருப்பாதை யாத்திரை வழிபாடுக்கு பங்குத்தந்தை ரெமிஜியஸ் தலைமை வகித்தாா். இதில் உலக அமைதிக்காகவும், பாவங்களுக்கு பரிகாரமாகவும், மக்கள் மத்தியில் நல்ல உறவும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காகவும் இதற்கு தடையாக இருக்கும் அனைத்து அநீதி செயல்பாடுகள் நீங்கிட இந்த தவ நடை திருப்பாதை யாத்திரை நடைபெற்றது.

இந்த யாத்திரை தேவாலயத்திலிருந்து தொடங்கி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கடற்கரையில் ஆற்றங்கரையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தூய அமலோற்பவ மாதா கெபியில் நிறைவடைந்தது. அங்கு நற்கருணை ஆராதனையும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனா்.