சென்னை மற்றும் புறநகர பகுதிகளில் விடிய விடிய மழை

சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
மழை(கோப்புப்படம்)
மழை(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வருகிற ஆக. 9- ஆம் தேதி வரை மேற்கு காற்றின் திசை மாறுபாடு, வெப்பச் சலனம் காரணமாக மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை(கோப்புப்படம்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பள்ளிகள் இன்று இயங்கும்

அதன்படி சென்னை, மதுரவாயல், கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், சென்ட்ரல், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெய்வேலியில் 11.6 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. இதேபோல் அரியலூர் 5.5. செ.மீ., மீனம்பாக்கம் 4 செ.மீ., பெரம்பலூர் 4.7 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com