
கோடியக்கரை தென்கிழக்குக் கடலில்,மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் வேதாரணத்துக்கு அப்பால், நடுக்கடலில் மீன்பிடித்த போது, இலங்கைக் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கும் நபர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள் நால்வர், இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர், செல்வகிருஷ்ணன், தனசேகரன், ராஜகோபால் ஆகிய மீனவர்கள் நால்வரும் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் சனிக்கிழமை (ஆக. 10) கடலுக்குச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்குக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைப் படகில் வந்த மூன்று பேர் தமிழக மீனவர்கள் இருந்த படகில் ஏறி, உடைமைகளை பறித்துக் கொண்டு, ஆயுதங்களால் மீனவர்களைத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரும் இன்று (ஆக. 11) அதிகாலையில் கரை திரும்பினர்.
காயமடைந்த நால்வரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.