அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் தூய்மைப் பணியாளரின் மகள்! முதல்வர் வாழ்த்து

படிப்பை மட்டுமே நம்பி வாழ்க்கையில் முன்னேறி இருப்பதாக துர்கா பேட்டி..

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 2:22 pm

DIN

நகராட்சி ஆணையராகப் பணி ஆணை பெற்ற துர்காவுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளரின் மகளான துர்கா, நகராட்சி ஆணையராக பொறுப்பேற்கவிருப்பது இளைஞர்களை ஊக்குவிப்பதாய் அமைந்துள்ளது.

இந்த நிலையில், துர்கா அளித்துள்ள பேட்டியில், தனது தாத்தாவும், அப்பாவும் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றியவர்கள் என்றும், இந்த நிலையில், ஏழ்மையான சூழலில் வாழ்ந்தாலும், படிப்பை மட்டுமே நம்பி வாழ்க்கையில் முன்னேறி இருப்பதாகவும் துர்கா பேட்டியில் தெரிவித்திருப்பது, இளைஞர்களை ஊக்குவிப்பதாய் அமைந்துள்ளது.

Story image

அவரைப் பாராட்டி முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ’நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் கல்விக்கு இருப்பதாகவும், இதற்கு ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்கா சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி என்று தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் சிறப்பிடம் பெற்று நகராட்சி ஆணையராகப் பணி ஆணை பெற்றுள்ள துர்காவின் தந்தை கடந்த 7 மாதங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டாலும், அவரது கனவை துர்கா நிறைவேற்றியிருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.