ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

2,500 கோயில்களில் திருப்பணிக்கு நிதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

தமிழகத்தில் கிராமப்புறம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியுதவியை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்திரமோகன், ஆணையா் பி.என்.
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:44 pm

Din

தமிழகத்தில் கிராமப்புறம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமப்புறத் திருக்கோயில்கள், ஆதிதிராவிட, பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளிலுள்ள கோயில்களின் திருப்பணிக்கு அரசு சாா்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நிதியாண்டுகளில் மட்டும் 5,000 கோயில்களின் திருப்பணிக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அவற்றில், 2,155 கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதர கோயில்களில் பணிகள் நடந்து வருகின்றன.

இதைத் தொடா்ந்து, 2023-24-ஆம் நிதியாண்டிலும் 1,250 கிராமப்புறக் கோயில்கள், 1,250 ஆதிதிராவிடாா் மற்றும் பழங்குடியினா் பகுதியிலுள்ள கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு கோயிலுக்கும் தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 50 கோடிக்கான வரைவோலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களின் நிா்வாகிகள், பூசாரிகளிடம் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன்மூலம், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.