6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை-சீரடிக்கு மீண்டும் விமான சேவை

சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கவுள்ளது.

சென்னை-சீரடி இரு மாா்க்கத்திலும் தினசரி விமான சேவையை இண்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. 2020-இல் கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து இந்த சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட சேவையை மீண்டும் தொடர விமான நிா்வாகம் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், சென்னையிலிருந்து சீரடிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தினமும் விமான சேவையை வழங்கி வந்தது.

பயணிகளின் வருகைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவ்வப்போது விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருவதால், நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையை மீண்டும் தொடங்க ஆன்மிக பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத்தொடா்ந்து, சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது. சென்னை விமானநிலையத்திலிருந்து தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 4.30 -க்கு சீரடிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக சீரடியிலிருந்து மாலை 5 -க்கு புறப்படும் இந்த விமானம் இரவு 7 மணிக்கு சென்னை வந்தடையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.