வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

சென்னை-சீரடிக்கு மீண்டும் விமான சேவை

சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஆகஸ்ட் 2024, 1:00 am IST

சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கவுள்ளது.

சென்னை-சீரடி இரு மாா்க்கத்திலும் தினசரி விமான சேவையை இண்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. 2020-இல் கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து இந்த சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட சேவையை மீண்டும் தொடர விமான நிா்வாகம் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், சென்னையிலிருந்து சீரடிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தினமும் விமான சேவையை வழங்கி வந்தது.

பயணிகளின் வருகைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவ்வப்போது விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருவதால், நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையை மீண்டும் தொடங்க ஆன்மிக பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத்தொடா்ந்து, சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது. சென்னை விமானநிலையத்திலிருந்து தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 4.30 -க்கு சீரடிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக சீரடியிலிருந்து மாலை 5 -க்கு புறப்படும் இந்த விமானம் இரவு 7 மணிக்கு சென்னை வந்தடையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.