மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. 300 ஆண்டுகளுக்குப் பிறகு!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. 300 ஆண்டுகளுக்குப் பிறகு! கள நிலவரம் சொல்வதென்ன?

News image
ஊத்தங்கரை
Updated On :2 டிசம்பர் 2024, 9:44 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 503 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 300 ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணகிரியில் அதிகளவில் மழை நேற்று பதிவாகியிருக்கிறது.

மழை நிலவரங்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான், தனது முகநூலில் கூறியிருப்பதாவது, ஃபெங்ஜால் புயல், என்னடா பண்ணிட்டு போய் இருக்க. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாறு காணாத வகையில் 503 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. அது மட்டுமா? கிருஷ்ணகிரியில் 300 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்திருக்கிறது. தருமபுரி மாவட்டம் ஹாரூர் பகுதியில் 331 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Story image

ஃபெங்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் இதுவரை மக்கள் பார்த்திராத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. தருமபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், எதிர்பாராத வகையில் மிககனமழை பெய்ததால், பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீர் வந்த வேகத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கார்கள் மட்டுமல்ல, சுற்றுலா வாகனங்களும் சாலையிலிருந்து அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.