கடலூர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சருக்கு விடியோ கால் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று காலை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு விடியோ கால் செய்த முதல்வர் ஸ்டாலின், கடலூர் நிலவரத்தை கேட்டறிந்தார். மேலும், வெள்ள நீர் சூழ்ந்த இடங்களை பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்து பார்த்துக் கொள்ளும்படி அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க : பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
மேலும், விழுப்புரத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது படம்! அறிமுக பாடல் வெளியீடு!
பவிஷ் நடிப்பில் உருவாகும் அட்டாக்கர்!
உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைப்பதைத் தடுக்க வலியுறுத்தல்: உதயநிதி
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



