இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்கச் சொன்னதே நான்தான் என்றார் திருமாவளவன்.

News image
செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன்
Updated On :8 டிசம்பர் 2024, 2:27 pm

DIN

விஜய் பங்கேற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்கச் சொன்னதே நான்தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (டிச. 8) தெரிவித்தார்.

கட்சியில் உள்ளவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தால், தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவில் ஆலோசித்த பின்னரே பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் எனக் குறிப்பிட்டார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது,

''எளிய மக்களை அமைப்பாக்கி வருகிற கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதில் ஜனநாயகப்பூர்வமான முடிவுகளையே இதுவரை எடுத்துள்ளோம்.

மற்ற கட்சிகளைப் போன்று விசிக-வும் முடிவெடுக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

விசிக தொடக்கத்தில் தலித் இயக்கம் என்ற அடையாளத்தோடு பொதுப்பணியில் ஈடுபட்டது.

அரசியல் இயக்கமாக மாற எடுத்துக்கொண்ட முயற்சியில் ஒன்றாக, சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் கட்சிப் பொறுப்பில் அங்கம் வகிக்க தீர்மானம் நிறைவேற்றினோம். இதனை வேளச்சேரி தீர்மானம் என்றே அழைக்கிறோம்.

இதன்படி, தலித் அல்லாதோரும் விசிக கட்சியில் முக்கிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்து பொறுப்பேற்றனர். அவ்வாறு வந்தவர்தான் ஆதவ் அர்ஜுனா.

விசிகவில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு 10 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்புச் செயலாளர் பொறுப்பு 10 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தலித் அல்லாதோரும் உண்டு.

தலித் அல்லாதோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தால், தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவில் ஆலோசித்து ஆய்வு செய்து பின்னரே பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்.

இதனை விசிக நடைமுறையாகவே கொண்டுள்ளது. மற்ற கட்சிகளைப் போன்று நாங்கள் செயல்பட வேண்டும் என நினைப்பது ஏற்புடையதல்ல.

ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து உயர்நிலைக் குழுவில் ஆலோசித்து முடிவு எடுப்போம். இது குறித்து விரைவில் அறிவிப்போம். தற்போது வரை ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறார்.

அம்பேத்கர் பேத்தியின் கணவரான ஆனந்த் டெல்டும்டே மீது தீவிரவாத முத்திரை குத்துவது அநாகரிக அரசியல்'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.