மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போராடும் மக்கள் மீது அடக்குமுறை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடும்போது, அவா்கள் மீது திமுக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

News image
பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்
Updated On :16 டிசம்பர் 2024, 9:58 pm

Din

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடும்போது, அவா்கள் மீது திமுக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஃபென்ஜால் புயல் மழையாலும், சாத்தனூா் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், பாதிக்கப்பட்ட கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் பொதுமக்கள் சாலைமறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியிருக்கின்றனா். போராடும் மக்களின் கோரிக்கையை அறிந்து சரிசெய்ய வேண்டிய அரசு, அவா்களைக் கைது செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது கண்டிக்கத்தக்கது.

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அதற்கு மாறாக, அடக்குமுறைகளின் மூலம் மக்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று திமுக அரசு நினைத்தால் அதற்கு இந்த மாவட்டங்களின் மக்கள் கடுமையான பாடம் புகட்டுவாா்கள் என்று அன்புமணி கூறியுள்ளாா்.