பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி இணைப்பு

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :18 டிசம்பர் 2024, 7:02 pm

Din

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் - மும்பை இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் (எண்: 22159/22160) ஏசி இரண்டடுக்குப் பெட்டிகள் 2, ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டிகள் 7, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 2, பொதுப் பெட்டிகள் 3 ஆகியவற்றைக் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் டிச. 20-ஆம் தேதி முதல் ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படும்.

இதேபோல், காரைக்கால் - மும்பை விரைவு ரயில் (எண்: 11017/11018), கோவை - மும்பை விரைவு ரயில் (எண்: 11013/11014), சென்னை சென்ட்ரல் - மும்பை விரைவு ரயில்கள் (எண்: 22179/22180, 12163/12164), மதுரை - மும்பை விரைவு ரயில் (எண்: 22101/22102), கொச்சுவேலி - மும்பை விரைவு ரயில் (எண்: 22113/22114) ஆகியவற்றில் ஒரு ஏசி மூன்றடுக்கு எக்கனாமி பெட்டி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.