பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

எங்கள் 'ஐசிஎஃப் மனிதனுக்கு' வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பை வென்ற ஐசிஎஃப்-இல் பணியாற்றி வரும் வீரர் பிருத்வி சேகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Published On :9 பிப்ரவரி 2024, 7:09 pm IST


காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பை வென்ற ஐசிஎஃப்-இல் பணியாற்றி வரும் வீரர் பிருத்வி சேகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முதல்வர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எங்கள் 'ஐசிஎஃப் சென்னை மனிதனுக்கு' வாழ்த்துகள்.

அனைத்துத் தடைகளையும் தாண்டி காது கேளாதோர் மற்றும் கேட்கும் திறனில் குறைபாடுடையோருக்கான பிரிவில் ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன்ஷிப் வென்றுள்ள சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை ஊழியரான பிருத்வி சேகர் அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

மீள்திறன், திறமை, மனவுறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் உங்கள் வெற்றியானது, சாதனையாளர்கள் சவால்களைத் தமக்கே உரிய பாணியில் எதிர்கொண்டு மேலெழும்புபவர்கள் என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்து மெய்யான ஊக்கமாக விளங்குகிறது. வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.