ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம்.. விமானத்தில் ஒலித்த குரல்: சு. வெங்கடேசன் பதிவு

ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் என்று தமிழில் ஒலித்த குரல் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
விமானியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்
விமானியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்


உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்தபோது, ராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் என்று தமிழில் ஒலித்த குரல் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,  உள்நாட்டு விமானத்தில் அவ்வப்பொழுது தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதைக் கேட்க முடியும். நேற்று மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் விமானியின் அறிவிப்பு வியப்பை உருவாக்கியது.

“இடது பக்கம் இருக்கும் பயணிகளின் பார்வைக்கு தெரிவது முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி” என்று ஒலித்தது அந்தக்குரல்.

காற்றின் வேகத்தை, வெயிலின் அளவைத்தான் விமானிகள் சொல்வார்கள் ஆனால் ஏரியின் வரலாற்றை வானிலே ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த குரலுக்கு சொந்தக்காரரான விமானி வெங்கடேசை அழைத்து வாழ்த்துச்சொன்னேன். வேள்பாரி வாசகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் அவர் விமானி வெங்கடேசுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com