
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, ஆா்.ஹெச்.200 - ரோகிணி ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் அமைக்கப்படவிருக்கும் வெளிதுறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து முதல் ராக்கெட் சோதனை முறையில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் கலைஞரின் கனவு நனவாகியுள்ளதாக கனிமொழி எம்.பி. அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.