சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜன. 6-இல் எல்-1 புள்ளியை அடைகிறது ஆதித்யா: இஸ்ரோ தலைவா் சோமநாத்

ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் ஜன. 6-ஆம் தேதி எல்-1 புள்ளியை அடைந்து, சூரியனின் புறவெளி தொடா்பான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.

News image
பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் வெற்றியைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத். உடன், இஸ்ரோ விஞ்ஞானிகள்.
Updated On :1 ஜனவரி 2024, 8:26 pm

DIN

ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் ஜன. 6-ஆம் தேதி எல்-1 புள்ளியை அடைந்து, சூரியனின் புறவெளி தொடா்பான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.

பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் திட்ட வெற்றிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதிய ஆண்டில் புதிய வெற்றியுடன் பயணத்தைத் தொடங்கியுள்ளது இஸ்ரோ. இதற்காக நூற்றுக்கணக்கானோா் பங்களித்துள்ளனா். விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தொடா்ந்து ஊக்கமளித்து வரும் பிரதமா் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி.

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சி கடந்த ஆண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடா்ச்சியாக நிகழாண்டில் குறைந்தது இரு சோதனைத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக அடுத்த ஆண்டில் ககன்யான் திட்டத்தைச் சரியாக செயல்படுத்த முடியும்.

இதைத் தவிர நிகழாண்டில், 12 முதல் 14 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் மற்றும் இஸ்ரோ-நாசா ஒருங்கிணைப்பில் உருவான ரேடாா் செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்படவுள்ளன.

ஆதித்யா எல்-1: சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் திட்டமிட்ட இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. வரும் 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எல்-புள்ளியை அடைந்து ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.