மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர் பேசும்போது மோடி மோடி என முழக்கமிட்ட பாஜகவினர்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 12:22 pm

DIN

திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் புதிய முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று காலை புது தில்லியில் இருந்து திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

பிறகு, திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை இன்று நண்பகல் 12 மணிக்குத் திறந்து வைத்தார்.

புதிய முனையம் திறப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசத் தொடங்கியதும், விழாவில் பங்கேற்றிருந்த பாஜகவினர், மோடி மோடி என முழக்கமிட்டனர். இதைக் கேட்டதும் திமுகவினரும் ஸ்டாலின் ஸ்டாலின் என முழக்கமிட்டனர். இதனால் சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று ஸ்டாலின் கூறியபோதும் பாஜகவினர் முழக்கமிட்டனர்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார். மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் எனவும், சென்னை - பினாங், சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

மேலும், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும், மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.