மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமர் மோடிக்கு சுவாமி சிலை பரிசளிப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவாமி சிலை பரிசளிக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 12:17 pm

DIN


திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவாமி சிலை பரிசளிக்கப்பட்டது.

புது தில்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடியை திருச்சி விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றனர்.

வழி நெடுகிலும் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு பாஜக, திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் பிரதமர் மோடி காரில் இருந்தபடியே கைகளை அசைத்துச் சென்றார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணியளவில் 38-ஆவது பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் பங்கேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு சுவாமி சிலை பரிசளிக்கப்பட்டது.

பட்டமளிப்பு விழா  தொடங்கிய நிலையில் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற 33 பேருக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். அருகில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோர் உள்ளனர்.

தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கிறாா் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். இந்த இரண்டு விழாக்களிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய, மாநில அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.

தமிழகத்தில் ரூ.19,850 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று காலை திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.

தமிழகத்தைத் தொடா்ந்து லட்சத்தீவுக்கு பயணிக்கும் பிரதமா், அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.