கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விஜயகாந்த் நினைவிடத்தில் சரத்குமார் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி!

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த நடிகரும்,சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

News image

விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார்.

Updated On :3 ஜனவரி 2024, 7:27 am

DIN

சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார்  மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 28-ஆம் தேதி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவின் போது சரத்குமார் வெளிநாட்டில் இருந்ததால் விடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை திரும்பிய சரத்குமார், விஜயகாந்த் நினைவிடம் அமைந்துள்ள கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தவர் சோகம் நிறைந்த முகத்துடன் கண்ணீர் மல்க விஜயகாந்த் நினைவிடத்தை பார்த்து கொண்டே நின்று கொண்டிருந்தார்.

பின்னர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், கேப்டன் விஜயகாந்த் மணிமண்டபம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் அரசுக்கு வேண்டுகோள் கொடுத்த கோரிக்கையை குறித்து அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஆலோசனைகள் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேலு வருகை தராததும், நடிகர் சங்கத்தின் மற்ற சில நடிகர்கள் வராததும் அது அவர்களுடைய விருப்பம் என்று சரத்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.