விஜயகாந்த் நினைவிடத்தில் சரத்குமார் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி!
சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 28-ஆம் தேதி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவின் போது சரத்குமார் வெளிநாட்டில் இருந்ததால் விடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை திரும்பிய சரத்குமார், விஜயகாந்த் நினைவிடம் அமைந்துள்ள கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தவர் சோகம் நிறைந்த முகத்துடன் கண்ணீர் மல்க விஜயகாந்த் நினைவிடத்தை பார்த்து கொண்டே நின்று கொண்டிருந்தார்.
இதையும் படிக்க | முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் காலமானார்
பின்னர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், கேப்டன் விஜயகாந்த் மணிமண்டபம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் அரசுக்கு வேண்டுகோள் கொடுத்த கோரிக்கையை குறித்து அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஆலோசனைகள் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேலு வருகை தராததும், நடிகர் சங்கத்தின் மற்ற சில நடிகர்கள் வராததும் அது அவர்களுடைய விருப்பம் என்று சரத்குமார் தெரிவித்தார்.