தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத் தெண்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மழை நிலவரம் குறித்து பாலச்சந்திரன் கூறுகையில்,
தமிழகத்தைப் பொருத்தவரை ஜனவரி 13-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
இன்று திருவாரூர், நாகை, மயிலை உள்பட 7 மாவட்டங்களில் மிகக் கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுவை, நாகப்பட்டினம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் ஜனவரியில் இதுவரை இல்லாத அளவு மழைப் பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் இயல்பை விட இந்தாண்டு 4 சதவீதம் அதிகளவில் மழைப் பதிவாகியுள்ளது.
சென்னையில் ஒருசில இடங்களில் மேகம் திடீரென உருவாகி விட்டுவிட்டு மழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரேஞ்ச் ரோவர் கார் விலை ரூ. 75 லட்சம் குறைப்பு!

திமுக ஆதரவுடன் முதல்வராகப் போவதாக இபிஎஸ் கூறினார்! சி.வி. சண்முகம்

பேரவையில் முதல்வர் விஜய் அளித்த உத்தரவாதங்கள்! | TVK
பாசில் ஜோசஃபின் அதிரடி டிரைலர்!
விடியோக்கள்

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

