பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழர் கலாசார பண்பாட்டு வரலாற்றில் தனியிடம் பெற்றவை பொங்கல் திருநாள். இந்த திருநாள் உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | தமிழகம் முழுவதும் பொங்கல் கோலாகலமாக கொண்டாட்டம்!
இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை பார்க்க அவரது வீட்டிற்கு முன்பு திரண்டனர். திங்கள்கிழமை காலை 9.45 மணியளவில் ரஜிகர்களை சந்தித்து தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினிகாந்த்.
அவர் பேசியதாவது:
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அநைவரும் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். ஓழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.