இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது விழாவில் பிரதமர் மோடிக்கு வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து ஆளுநர், மத்திய அமைச்சர்களுக்கு நினைவுப் பரிசை அமைச்சர் உதயநிதி வழங்கினார். இன்று கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. பிரதமர் விழாவை தொடக்கி வைக்க, விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மத்திய இணையமைச்சா் நிசித் பிரமாணிக், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். எல்லோருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில் உழைத்து வருகிறோம். தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவதே நமது குறிக்கோள். விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றும் இலக்கை நோக்கி பயணிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுகிறேன். விளையாட்டு கட்டமைப்புகளை உலகத் தரத்துக்கு உயர்த்தி வருகிறோம்.
இந்தியாவிலேயே முதல்முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, நீலிகிரியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.63 கோடியில் மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைக்க உள்ளேன். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்டதே திராவிட மாடல் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...