ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பறவைகளைக் கண்டு ரசிக்க வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம்...

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் பறவைகள் காணல் துறை தொடங்கப்பட்டுள்ளது.

News image
சுருளி அருவியில் பறவைகள் காணல் பார்வையாளர்கள்
Updated On :28 ஜனவரி 2024, 7:15 am

DIN

தேனி மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுருளி அருவியில் பறவைகளைக் காண்பதற்காக பிரத்யேக துறை தொடங்கப்பட்டுள்ளது.

பறவைகளைக் காண்பது என்பது மிகச் சிறந்த இயற்கையோடு இணைந்த பொழுதுபோக்குகளில் ஒன்று.

சுருளி அருவி, அடர்ந்த வனப்பகுதி என்பதால் பல்வேறு அரியவகை பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

பறவை ஆர்வலர்கள் இவற்றை காண்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் வசதியாக பறவைகள் காணல் துறை தொடங்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புலிகள் காப்பக துணை இயக்குநர் எஸ்.ஆனந்த் தொடங்கி வைத்து பேசியதாவது: 

தமிழ் நாட்டில் முதன் முறையாக பறவைகள் காணல் துறை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுருளி அருவியில் உள்ள பறவைகளை  எந்தவித இடையூறுமின்றி பார்வையாளர்கள் ரசிக்கவும், அரிய வகை மரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 


வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் 8:00 மணிவரை  இங்கு வந்து பறவைகளைக் கண்டு ரசிக்கலாம்.

இதில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. நுழைவு கட்டணம்  ரூ 200 வசூலிக்கக்கப்படுகிறது. 

காலை உணவு, தேநீர் மற்றும் பறவைகள் பற்றிய கையேடு ஆகியவை வழங்கப்படும். வழிகாட்டி ஒருவர் பறவைகள் குறித்து விளக்கம் தருவார். இதில் கலந்துகொள்ள இந்த எண்ணில் 8667471942 தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.