ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

முதலிடம் பெற்ற சுகாதார நிலையத்தைப் பாராட்டி சீர்வரிசை!

தஞ்சாவூர் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம்.

News image

தஞ்சாவூர் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை சீர்வரிசை கொண்டு வந்த மாநகராட்சி நிர்வாகத்தினர்.

Updated On :31 ஜனவரி 2024, 1:04 pm IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பெற்றதைப் பாராட்டி மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை சீர்வரிசை வழங்கி கௌரவித்தது.

மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மேயர் சண். ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் ஆர். மகேஸ்வரி முன்னிலையில் ஊழியர்கள் மேள, தாளம் முழங்க பழங்கள்,மலர்கள்,மலர் கிரீடங்களை ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். 

Story image

கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மேள, தாளம் முழங்க பழங்கள், மலர்கள், மலர் கிரீடங்களை ஊர்வலமாகக் கொண்டு வரும் மாநகராட்சி நிர்வாகத்தினர்.
 

இந்த ஊர்வலம் காந்திஜி சாலை, சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் பாலம் வழியாக கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்தைச் சென்றடைந்தது.

பின்னர், நிலையத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நிலைய மருத்துவர் முத்துக்குமாருக்கு மலர் கிரீடம் வைத்து, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். 

தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதையடுத்து மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோர் பாராட்டிப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.