ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பாமக பிரமுகரைக் கொல்ல முயன்ற கும்பல் சிக்கினர்!

முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சித்ததாக வாக்குமூலம்

News image
Updated On :7 ஜூலை 2024, 12:50 pm IST

கடலூர் மாவட்டத்தில் பாமக பிரமுகரான சிவசங்கரை கொலை செய்ய முயன்ற கும்பலை, திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா், எஸ்.என்.சாவடி பகுதியைச் சோ்ந்த பாமக பிரமுகரான சிவசங்கரை, சனிக்கிழமை பிற்பகல் தனது வீட்டின் முன் 4 போ் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில், பலத்த காயமடைந்த சிவசங்கர், சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்கபாண்டியன், சதீஷ், வெங்கடேசன் ஆகிய மூவரும், கடந்தாண்டு சிவசங்கா் தம்பி பிரபுவை கொலை செய்தனா்.

இந்த சம்பவத்தின் வழக்கு கடலூா் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் தான், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகவும், வழக்கை முன்னின்று நடத்துபவருமான சிவசங்கரை வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.