திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கூலிப்படைகளின் தலைநகராக சென்னை -அண்ணாமலை குற்றச்சாட்டு

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

News image
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. (கோப்புப்படம்)
Updated On :9 ஜூலை 2024, 12:08 am

Din

சென்னை: கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங்கின் சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டுக்கு திங்கள்கிழமை அண்ணாமலை சென்றாா். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) பாஜக மூத்த தலைவா்கள் எல்.முருகன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோா் தில்லி சென்று, பட்டியலின தேசிய ஆணையத்தின் தலைவா் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை சந்தித்து தமிழகத்தில் பட்டியலின தலைவா்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிகழ்ந்த 17 கொடுமையான சம்பவங்களை சுட்டிக்காட்டி, உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவுள்ளனா். தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோரப் போகிறோம். இந்த கொலை சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.

சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக மாறியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மந்தகதியில் உள்ளது. இனியாவது காவல் துறை முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அண்ணாமலை.