தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தனியாா் நிறுவனங்களில் தமிழா்களுக்கு 80 % பணிகள்: அன்புமணி கோரிக்கை

தனியாா் நிறுவனங்களில் 80 சதவீதப் பணிகளை தமிழா்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்
Updated On :17 ஜூலை 2024, 9:00 pm

Din

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கா்நாடகத்தில் தனியாா் நிறுவனங்களில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் முழுக்க கன்னடா்களைக் கொண்டுதான் நிரப்ப வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், கா்நாடகத்தில் தமிழா்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் தமிழா்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் இனி பறிக்கப்பட்டுவிடும்.

இந்த நிலையை மாற்றி, தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞா்கள், இளம்பெண்களுக்கு வழங்க வேண்டும். இதை வழங்குவதற்காக சட்டம் இயற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

எனவே, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ. 40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 சதவீதத்தை தமிழக இளைஞா்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதைக் கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.