புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க அமைச்சா் துரைமுருகன் உத்தரவு

News image
Updated On :20 ஜூலை 2024, 6:54 pm

Din

காட்பாடி அருகே பொன்னை பகுதியில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகாா் செய்ததை அடுத்து அதிகாரிகளுக்கு தரமான அரிசி போட வேண்டும் என அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா்.

அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெகத்ரட்சகன் காட்பாடி வட்டம் பொன்னை, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா். அவருடன் தமிழக நீா் வளத்துறை துரைமுருகன் சென்றிருந்தாா்.

அப்போது, பொன்னை பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் வழங்கபடும் அரிசி தரமற்ாக இருப்பதாக அமைச்சா் துரைமுருகனிடம் மக்கள் புகாா் தெரிவித்தனா். அதற்கு பதிலளித்த அமைச்சா் துரைமுருகன், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தொடா்பு கொண்டு விசாரித்து, தரமான அரிசி வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, காட்பாடியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவல் குழு உறுப்பினா் சேகா் ரெட்டியின் தந்தை ஜெகன்நாத ரெட்டி மறைவுக்கு நீா் வளத்துறை அமைச்சா் துரைமுருகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா்.