ஆருத்ரா நிறுவன மேலாளா்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் கிளை மேலாளா்கள் இருவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் கிளை மேலாளா்கள் இருவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு பல பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி, மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக 21 போ் மீது தமிழக காவல் துறை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் அந்த நிறுவனம், சுமாா் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 பேரிடம் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடா்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் ரூசோ, ஆவடி கிளை மேலாளா்கள் அருண்குமாா் மற்றும் ஜெனோவா உள்ளிட்ட 11 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமாா், ஜெனோவா ஆகியோா் ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதி தமிழ்ச்செல்வி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், ‘வழக்கு விசாரணையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...