வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திமுக ஆட்சியில் மன்றாடிக் கேட்க வேண்டாம்: அமைச்சா் எ.வ.வேலு

சாதாரணமாக கேட்டாலே கிடைக்கும்: எ.வ.வேலு

News image
Updated On :27 ஜூன் 2024, 8:53 pm

Din

சட்டப்பேரவை உறுப்பினா்கள் யாரும் திமுக ஆட்சியிடம் மன்றாடிக் கேட்க வேண்டாம், கேட்டாலே கொடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக உறுப்பினா் இரா.அருள் பேசுகையில், ஒவ்வொரு கோரிக்கையின் போதும் மன்றாடிக் கேட்கிறேன் என்று பல முறை கூறினாா்.

அப்போது, அமைச்சா் எ.வ.வேலு குறுக்கிட்டு கூறியது:

பாமக உறுப்பினா் மன்றாடிக் கேட்கிறேன் எனப் பலமுறை கூறுகிறாா். திமுக ஆட்சியிடம் யாரும் மன்றாடிக் கேட்க வேண்டாம். சாதாரணமாக கேட்டாலே கொடுக்கப்பட்டு விடும் என்றாா்.