சிஏஏ: தமிழ்நாட்டில் அமலாகாது எனக் கூற முதல்வருக்கு அதிகாரமில்லை!

பாஜக ஆட்சிக்கு வந்தால் மதுபானக் கடைகள் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை
சிஏஏ: தமிழ்நாட்டில் அமலாகாது எனக் கூற முதல்வருக்கு அதிகாரமில்லை!
Published on
Updated on
1 min read

பாஜக ஆட்சிக்கு வந்தால் மதுபானக் கடைகள் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வரும் 16ஆம் தேதி பாஜக சார்பில் பூத் அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விடமாட்டோம் என்று கூற முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை இருக்கிறதென்றும், இந்த சட்டத்தை வேறு யாரும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மக்களைக் குழப்பி திசைதிருப்புவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எது தவறென்று மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com