போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி கைது!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி கைது!
Published on
Updated on
1 min read

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிா்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்.

இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி கைது!
சென்னையில் சாம்பார் தராததால் உணவக ஊழியரைக் கொன்ற தந்தை, மகன்!

ஜாபா் சாதிக்கிடம், மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், சதா என்ற சதாசிவம் தனக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து, சென்னையில் பதுங்கிருந்த சதாசிவத்தை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com