27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

2,500 எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்கள் வழங்கி சுயேச்சை வேட்புமனு!

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், 2,500 எண்ணிக்கையில் பத்து ரூபாய் நாணயங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சையால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2024, 12:07 pm IST

நாமக்கல் அருகே மேற்கு பாலபட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி தி.ரமேஷ்(43). இவர் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார்.

2006 செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் முதல் 2023 ஈரோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரையில், பத்து முறை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் மற்றும் வாரணாசி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், காந்தி வேடமிட்டு நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 2,500 எண்ணிக்கையில் பத்து ரூபாய் நாணயங்களுடன், ரூ.25,000 வைப்புத் தொகையுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.