மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் சீல் அகற்றப்பட்டு மீண்டும் திறப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு
மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில், உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், ‘சீல்’ அகற்றப்பட்டு வெள்ளிக்கிழமை காலை(மார்ச் 22) மீண்டும் திறக்கப்பட்டது.

விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை வருவாய் ஆய்வாளர் கோயில் சீலை அகற்றினார்.









