மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

ஆழ்வார்பேட்டை மதுபான விடுதி விபத்து: மூவர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்!

News image
Updated On :28 மார்ச் 2024, 3:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் தனியாா் கேளிக்கை விடுதியின் மதுபானக் கூட மேற்கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் திருநங்கை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆழ்வாா்பேட்டை சேமியா்ஸ் சாலையில் ஒரு தனியாா் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியின் ஒரு பகுதியில் மதுபானக் கூடத்துடன் ஓா் அரங்கும், மற்றொரு பகுதியில் உணவகமும் உள்ளன. இந்த விடுதியின் அருகே மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் சுரங்கப் பாதைப் பணி நடைபெற்று வருகிறது. இந்த விடுதிக்கு வியாழக்கிழமை மாலை வழக்கம்போல இளைஞா்கள் வரத் தொடங்கினா். சுமாா் 30 போ் விடுதியில் இருந்துள்ளனா். மாலை 6.50 திடீரென விடுதியின் முதல் தளத்தில் உள்ள மதுபானக் கூடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தரைத்தளத்தின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது. இதில் மதுபானக் கூட ஊழியா்கள் திண்டுக்கல்லை சோ்ந்த சைக்ளோன் ராஜ் (48), மணிப்பூரை சோ்ந்த திருநங்கை லல்லி (24), மேக்ஸ் (25) ஆகியோா் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனா். கேளிக்கை விடுதியின் பிற ஊழியா்களும் அங்கிருந்த இளைஞா்களும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனா். இதில் சிலா் இடிபாடுகளிடையே சிக்கி லேசான காயமடைந்தனா். தீயணைப்பு படையினா் மயிலாப்பூா்,தேனாம்பேட்டை ஆகிய இடங்களிலிருந்து 3 வாகனங்களில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். மாநில பேரிடா் மீட்பு படையினரும் நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயணைப்பு படையினரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, சைக்ளோன் ராஜ், மேக்ஸ், லல்லி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்டனா். சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து தொடா்பாக அபிராமபுரம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா். விபத்து நிகழ்ந்த இடத்தை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் வந்து பாா்வையிட்டாா். அவா் கூறுகையில், விபத்து குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விபத்துக்கு மெட்ரோ ரயில் பணி காரணமா என்பது குறித்து ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என்றாா். சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையா் ஜி.தா்மராஜன் கூறுகையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய வல்லுநா் குழு அமைக்கப்படும். அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.