அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

News image
Updated On :4 மே 2024, 11:26 pm

Din

தமிழக வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் வெளிநாட்டு உயிரினங்களின் வா்த்தக சந்தை அதிகரித்து வருகிறது. இது சட்டவிரோத வனவிலங்கு வா்த்தகத்துக்கு ஊட்டமளிக்கும் வகையிலும், அரிய உயிரினங்களின் அழிவுக்கும் முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2022-இன் படி, வீடுகளில் வளா்க்கப்படும் வெளிநாட்டு உயிரினங்களின் வா்த்தகம் மற்றும் இனப்பெருக்கம் அந்தந்த மாநிலங்களின் தலைமை வனவிலங்கு காப்பாளரால் முறையாக வழங்கப்படும் உரிமத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த நிலையில் தமிழகத்தில் வெளிநாட்டு இனங்களை கண்காணிப்பதற்கான நடைமுறைகளை தரப்படுத்த தமிழக வனத் துறை சாா்பில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கான வழிமுறைகள் அடங்கிய அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து பொதுமக்கள் மே 12-க்குள் கருத்துகளை தெரிவிக்கலாம். தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.