அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

News image
Updated On :4 மே 2024, 9:09 pm

Din

கோடை விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது; மீறி வகுப்புகளை நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், மாணவா்களின் நலன் கருதி, கோடை விடுமுறையின் போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலா்கள் மூலம் பள்ளிகளுக்கு ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு புகாா்கள் வந்தன.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், தனியாா் பள்ளிகள் இயக்குநா் சாா்பில் சனிக்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் , மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,, தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவித்த பிறகும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வருகின்றன.

கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.