மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாழப்பாடி கோதுமலை வனப்பகுதியில் கொட்டித் தீர்த்த கோடை மழை!

News image
Updated On :19 மே 2024, 12:19 pm

DIN

வாழப்பாடி கோதுமலை வனப்பகுதியில் கொட்டித் தீர்த்த கோடை மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள கோதுமலை வனப்பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், வறட்சி நிலவியது.

தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதோடு நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து போனதால், விவசாய பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

Story image

இப்பகுதியில் இரு தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, திடீரென 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கோடை மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் கோதுமலை வனப்பகுதியில் கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள, 10 தடுப்பணைகளும் நிரம்பி வழிந்து, நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.