மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வாழப்பாடி கோதுமலை வனப்பகுதியில் கொட்டித் தீர்த்த கோடை மழை!

News image
Updated On :19 மே 2024, 12:19 pm

வாழப்பாடி கோதுமலை வனப்பகுதியில் கொட்டித் தீர்த்த கோடை மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள கோதுமலை வனப்பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், வறட்சி நிலவியது.

தடுப்பணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதோடு நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து போனதால், விவசாய பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

Story image

இப்பகுதியில் இரு தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, திடீரென 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கோடை மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் கோதுமலை வனப்பகுதியில் கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள, 10 தடுப்பணைகளும் நிரம்பி வழிந்து, நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.