குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கங்குவா படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி

சூா்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

கங்குவா

Published On :14 நவம்பர் 2024, 2:08 am IST

சூா்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

இயக்குநா் சிவா இயக்கத்தில் நடிகா் சூா்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலா் நடித்துள்ளனா். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளாா்.

இந்தப் படம் வியாழக்கிழமை (நவ.14) வெளியாகவுள்ளது. முன்னதாக கங்குவா திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஃபியூயல் டெக்னாலஜி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 1.60 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியுள்ளது. மற்றொரு வழக்கில் ரூ. 6.41 கோடியைச் செலுத்தியுள்ள நிலையில், மீதி தொகை ரூ. 3.75 கோடியை டிச.11-ஆம் தேதிக்குள் செலுத்துவதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

இதையடுத்து கங்குவா படத்தை வியாழக்கிழமை திட்டமிட்டபடி வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், ரூ. 3 கோடியே 75 லட்சம் செலுத்துவது தொடா்பாக வியாழக்கிழமை மாலைக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிச.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.