மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்!

எழுத்தாளர் ராஜ் கெளதமன் புதன்கிழமை அதிகாலை காலமானார்.

News image
ராஜ் கௌதமன்- படம்: Tamil wiki
Updated On :13 நவம்பர் 2024, 6:36 am

DIN

தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) புதன்கிழமை அதிகாலை காலமானார்.

கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கத்திலேயே ராஜ் கெளதமனின் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 1950 ஆண்டு பிறந்த எஸ்.புஷ்பராஜ், பின்னாளில் தனது பெயரை ராஜ் கௌதமன் என மாற்றிக் கொண்டார்.

புதுப்பட்டி கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்த ராஜ் கௌதமன், மதுரையில் உயர்நிலைக் கல்வியையும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பை முடித்து புதுச்சேரி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

நாவலாசிரியர் அ. மாதவையா குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்ற ராஜ் கெளதமன், மார்க்சிய சமூகவியலிலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

பண்பாட்டு ஆய்வாளராக அறியப்பட்ட ராஜ் கௌதமன், தலித்தியம், பின்நவீனத்துவம், பழந்தமிழ் இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ், காலச்சுமை ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

சார்லஸ் டார்வினின் ‘தி ஒர்ஜின் ஆஃப் ஸ்பைசெஸ்’ (உயிரினங்களின் தோற்றம்), எரிக் ஃப்ராமின் ’தி சான் சொசைட்டி’ (மனவளமான சமுதாயம்) ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’ (அன்பு எனும்), போன்ற பல்வேறு பிரபல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

Story image

ராஜ் கெளதமனின் மனைவி எழுத்தாளர் பரிமளா. இவர்களின் ஒரே மகள் லண்டனில் மருத்துவராக உள்ளார்.

இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை பாளையங்கோட்டையில் உள்ள வீட்டில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.